விஷசாராயம் குடித்து 13 பேர் பலி.. 5 பேருக்கு தூக்கு: திருவண்ணாமலை கோர்ட் அதிரடி
கள்ளச்சாராய வழக்கில் நீதிமன்றம் 5 பேருக்கு தூக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த 2000ம் ஆண்டு விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் அதற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கள்ளச்சாராயத்தில் விஷம் கலந்த குற்றத்திற்காக 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி மகிழேந்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், 5 பேருக்கும் தலா ரூ.5,000 அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.













Click it and Unblock the Notifications