சிவகங்கை: இரட்டைக் கொலை மானாமதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்
மானாமதுரை: சிவகங்கை இரட்டைக் கொலை தொடர்பாக மானாமதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தந்தை, மகன் உட்பட நான்கு பேர் சரணடைந்தனர்.
சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா, வெங்கடேஸ்வரன். இவருவரையும் கடந்த 18ம் தேதி நள்ளிரவு மோட்டார் பம்ப் செட் ரூமில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. மறுநாள் காலை மோட்டார் ரூமில் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். தேர்தல் முன்விரோதம் தொடர்பாக இக்கொலை நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இன்று பகல் 11 மணிக்கு மானாமதுரை ஜேஎம் கோர்ட்டில் செந்தில், அவரது தந்தை முத்தையா, சுப்ரமணியன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய நால்வரும் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் பின் சம்பந்தபட்ட நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில் தரப்பினருக்கும் வெங்கடேஸ்வரன் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது. இருதரப்பினரும் பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து கொலை சம்பவம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பனங்காடியில் கொலை நடந்த போது சம்பவ இடத்தை பார்வையிட வந்து எஸ்பி அஸ்வின் கோட்னீசிடம் கிராமமக்கள் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications