சிவகங்கை: இரட்டைக் கொலை மானாமதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்
மானாமதுரை: சிவகங்கை இரட்டைக் கொலை தொடர்பாக மானாமதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தந்தை, மகன் உட்பட நான்கு பேர் சரணடைந்தனர்.
சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா, வெங்கடேஸ்வரன். இவருவரையும் கடந்த 18ம் தேதி நள்ளிரவு மோட்டார் பம்ப் செட் ரூமில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. மறுநாள் காலை மோட்டார் ரூமில் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். தேர்தல் முன்விரோதம் தொடர்பாக இக்கொலை நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இன்று பகல் 11 மணிக்கு மானாமதுரை ஜேஎம் கோர்ட்டில் செந்தில், அவரது தந்தை முத்தையா, சுப்ரமணியன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய நால்வரும் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் பின் சம்பந்தபட்ட நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில் தரப்பினருக்கும் வெங்கடேஸ்வரன் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது. இருதரப்பினரும் பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து கொலை சம்பவம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பனங்காடியில் கொலை நடந்த போது சம்பவ இடத்தை பார்வையிட வந்து எஸ்பி அஸ்வின் கோட்னீசிடம் கிராமமக்கள் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications