தென்காசி அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி
தென்காசி: தென்காசி அருகே நடந்த லாரி விபத்தில் 2 கூலித் தொழிலாளர்கள் பலியானார்கள்.
உத்திரப்பிரதேசமாநிலத்தை சார்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தில் கூலித் தொழிலாளிகளாக பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.நாமக்கல்லை சார்ந்த போர்வெல் கம்பனிகளில்1000க்கும் மேற் பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த போர்வெல் லாரிகள் அடிப்படையில் செல்லும் போது இந்த தொழிலாளர்களும் அப்படியே செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கேரளா மாநிலத்திலிருந்து அதிகாலை நாமக்கல்லை நோக்கி இரண்டு போர்வெல் லாரிகள் தென்காசி அருகேயுள்ள சிவராம பேட்டை அருகே சென்று கொண்டிருந்தன.அதில் 10 உத்திரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் படுத்திருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி வளைவில் உள்ள பாலத்தில் கவிழ்ந்தது.இதில் லாரியில் படுத்திருந்த தொழிலாளர்கள் முகேஷ்,பரமேஸ்வரன்,ஆகிய இரண்டுபேர் போர்வெல் பைப்கள் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரியில் பயணித்த மேலும் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.இதுகுறித்து அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று காயம் பட்டவர்களை தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இறந்தவர்கள் உடலைக் கைப்பற்றி இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications