அண்ணா பல்கலை., அம்பேத்கர் பல்கலை. மாஜி துணை வேந்தர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும், மற்றும் அம்பேத்கர் பல்லைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர் பல முக்கிய ஆவணங்களையும், ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராஜாராம் மீது, அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் எழுந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் தேனியிலுள்ள அவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ரெய்டுகளை நடத்தினர். மொத்தம், 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 65 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி மீது வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) மாணவர், சேர்க்கையில் முறைகேடு செய்ததாக புகார் இருந்தது. அவருக்கு சொந்தமான சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 74 ஆவணங்கள் மற்றும் 95 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னாள் துணை வேந்தர்கள் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications