மதுரையில் பயங்கரம்: அண்ணன், தம்பி உள்பட 3 பேர் வெட்டிக்கொலை
மதுரை: மதுரையில் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜீவா நகர் மீனாம்பிகை 8வது தெருவில் வசித்து வருபவர் குண்டுமலை. இவரது மகன்கள் கருப்புராஜா, நாகராஜ் மற்றும் அவர்களின் நண்பர் மணி. 3 பேரும் மதியம் 2 மணியளவில், வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டில் புகுந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், 3 பேரையும், அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தது. பின்னர் சாவகாசமாக அந்த இடத்தை விட்டு சென்றது.
அந்த கும்பல், ரவுடி அப்பளராஜா குரூப் என்றும், கோஷ்டி மோதல் காரணமாக, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரையில் பட்டப்பகலில் பத்துபேர் கொண்ட கும்பலால் 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications