பழனி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
பழனி: பழனி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குவாரி குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெத்தநாயக்கன்பட்டியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த பாலமுருகன், தமிழ்செல்வன் இருவரும் விடுமுறை நாளான நேற்று குளிக்கச் சென்றனர். அப்போது இருவரும் நீச்சல் தெரியாத காரணத்தினால் தண்ணீரில் மூழ்கினர். காப்பாற்ற யாரும் இல்லாத காரணத்தினால் நீரிலேயே மூழ்கி இறந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது பெற்றோரும், ஊர்மக்களும் காலை முதலேயே இருவரையும் தேடி வந்த நிலையில் இன்று குளத்திலிருந்து இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் உடற்கூறு ஆய்விற்கு பின்னர் சிறுவர்களின் உடலை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications