வாசனை திரவிய பாய்லர் வெடித்து 2 இளைஞர்கள் பரிதாப பலி!
நெல்லை: நெல்லையில் பாய்லர் வெடித்து அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் நகரில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாசனை திரவியங்கள் தயார் செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அங்கே கிராம்புகளை பாய்லரில் போட்டு வேகவைத்து அதில் கிடைக்கும் எசென்ஸானது வாசனைத்திரவியம் தயாரிப்பதற்காக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
நேற்று இரவு அந்த தொழிற்சாலையில் தமிழ்மணி , முரளிகிருஷ்ணன் மற்றும் அழகு நம்பி மூவரும் பனியில் ஈடுபட்டிருந்தனர். பாய்லரில் கிராம்பு போட்டு சூடாக்கிக் கொண்டிருந்தனர்.
169 டிகிரி பாரன் கீட் சென்றதும் கொதிநிலை பாய்லரில் உள்ள அழுத்தத்தை குறைத்து வெளியே எடுக்க வேண்டும். அப்படிச்செய்தபோது திடீரென்று எசென்ஸ் வெளியேறி பாய்லர் வெடித்தது. இந்த எதிர்பாராத விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications