தபால்துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்- இரண்டு மாத சம்பளம் போனஸ்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தாண்டு இரண்டு மாத சம்பளம் போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் துறையில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். என்னதான் செல்போன் வந்து விட்டாலும் இன்னும் தபால் துறை தன்னுடைய முயற்சியை விடவில்லை. தபால் துறையின் வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Two months salary bonus for postal employees

இந்த நிலையில் அடுத்த மாதம் தீபாவளி நெருங்குகிறது. இதனால் அவர்களுககு வழங்கப்படும் போனஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு மாதத்திற்கு போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3500 ஆகும். இதன்படி தபால் ஊழியர்களுக்கு 60 தினங்களுக்கு ரூ.7000 போனஸ் மொத்தமாக கிடைக்கும். இந்த உத்தரவு கிராமப்புற தபால் ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும் 7 சதவீத அகலவிலைப்படியும் தபால் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அகில இந்திய தபால்காரர்கள் சங்க பொது செயலாளர் சீதாலெட்சுமி தெரிவித்துள்ளார்.

போனஸ் இன்று முதல் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனால் தபால் துறையை சேர்ந்த ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+