நெல்லை: மோட்டார் அறையிலிருந்து கசிந்த மின்சாரத்தால் ஆற்றில் குளித்த இருவர் பலி
நெல்லை: நெல்லை அருகே ஆற்றில் பாய்ந்த மின்சாரத்தால் குளிக்கச் சென்ற இருவர் பரிதாபமாகப் பலியானார்கள்.
ஓட்டுநர்களான ரமேஷ் மற்றும் காமாட்சி இருவரும் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பன்குளம் கருணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த குடிநீர் திட்ட உறைகிணறு மோட்டார் அறையிலிருந்து கசிந்த மின்சாரம் நீரில் பாய்ந்திருக்கிறது. இதனை அறியாமல் ஆற்றில் இறங்கிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.
ஏற்கனவே, உறை கிணறு மோட்டார் அறையிலிருந்து மின் கசிவு இருப்பது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காததே இரு உயிர்களைப் பலி வாங்கக் காரணம் என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அம்பை அரசு மருத்துவ மனை முன்பாக பலியானவர்களின் உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அம்பை டி.எஸ்.பி. மணிமாறன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன் பொன்னுசாமி ஆகியோர் அளித்த வாக்குறுதிகளின் படி உறவினர்கள் சடலங்களைப் பெற்றனர்.
இருவர் பலியாகக் காரணமான அஜாக்கிரதை குற்றத்திற்காக குடிநீர்த் திட்ட பணியாளர்களான பால தண்டாயுதம், குமார் இருவரையும் கைது செய்ததோடு இசக்கி என்பவரையும் ஆழ்வார்குறிச்சி போலீசார்த் தேடி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications