For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாட்டி அஸ்தியை ஆற்றில் கரைக்கச் சென்ற பேரனும், உறவினரும் நீரில் மூழ்கி பலி- வீடியோ

பவானி ஆற்றில் பாட்டியின் அஸ்தியைக் கரைக்கச் சென்ற மோகன் நீரில் மூழ்கி தத்தளிக்க, அவரைக் காப்பாற்றச் சென்றவரும் நீரில் மூக, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: பவானி ஆற்றில் பாட்டியின் அஸ்தியைக் கரைக்க சென்றவர் நீரில் மூழ்க அவரைக் காப்பாற்றச் சென்றவரும் பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தடுத்து இருவர் உயிர் இழந்ததால் அப்பகுதியே சோகமயமாகக் காட்சியளிக்கிறது.

கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். அவருடைய பாட்டி மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய அஸ்தியை பவானி ஆற்றில் கரைக்கச் சென்றுள்ளார் மோகன். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினார்.

 Two persons drown in Bhavani river and died in Gopi

அதைக் கண்ட சுப்பிரமணி என்பவர் ஆற்றில்குதித்து அவரைக் காப்பாற்றச் செல்ல, அவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். தீயணைப்புப் படையினர் வந்து இருவரின் உடலையும் மீட்டனர்.

அஸ்தியைக் கரைக்கச் என்ற இடத்தில் ஒரே நேரத்தில் இருவர் உயிரிழந்த காரணத்தால் அப்பகுதியே சோகத்திலும் துன்பத்திலும் ஆழ்ந்துள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

English summary
In Gopichettipalayam, grandson Mohan went to immersing her Grandma's ash and unfortunately he drown into water and died. His friend Subramani went to save Mohan also died in water. This pathetic incident made every one of that place very sad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X