வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிறார் உதயகுமார்.. கைது செய்ய போலீஸ் ரெடி?
கூடங்குளம்: எளிய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் உதயகுமார் நாளை தனது ஆதரவாளர்கள், கட்சியினர் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்ய அஞ்சுகிராமம் வருகிறார். அப்போது அவரை போலீஸார் கைது செய்யலாம் என்பதால் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.
கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் தற்போது ஆம் ஆத்மி எனப்படும் எளிய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் நாளைய அவர் மனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து உதயகுமார் கூறுகையில், நாளை காலை இடிந்தகரையில் இருந்து வெளியேறி அஞ்சுகிராமத்திற்கு வருகிறேன். அங்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்து மதியம் 12 மணிக்கு மனு தாக்கல் செய்ய உள்ளேன். 30-ந் தேதி முதல் தொகுதியில் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
இடிந்தகரையை விட்டு வெளியேறும் போது போலீசார் என்னை கைது செய்தால் ஜெயிலுக்கு செல்ல தயாராக உள்ளேன். நாங்கள் எளிய மக்களுக்காகவும், அரசியல் மாற்றத்திற்காகவும் மட்டுமே தேர்தலில் நிற்கிறோம்.
எனது சொந்தப் பணத்தில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே செலவு செய்வேன் என்று நிதிக்குழு நண்பர்களிடம் தெரிவித்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித வருமானமுமின்றி நிதிநெருக்கடியை சந்திக்கும் எனது குடும்பம் இதற்கு மேல் பங்களிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நிதி உதவி பெரிதும் தேவைப்படுகிறது என்றார்.
உதயகுமார் மீது நெல்லை மாவட்டத்தில்தான் நிறைய வழக்குகள் உள்ளன. அவர் வேட்பு மனு தாக்கல் செய்யப் போவது குமரி மாவட்டத்தில். இருப்பினும் நெல்லை போலீஸார் அதிரடியாக வந்து உதயகுமாரைக் கைது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் பதட்டம் நிலவுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications