கரன்சி எண்ணுபவர்கள் நாளை கம்பி எண்ணுவார்கள்-"பழுத்த அரசியல்வாதி" சொல்வதை கேளுங்க மக்களே!
Recommended Video

சென்னை: கரன்சி எண்ணுபவர்கள் நாளை கம்பி எண்ணுவார்கள் என்று திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் சிக்கி திளைத்து கொண்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி விலகுமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதிமுக அரசோ குற்றம்சாட்டுவது எதிர்க்கட்சியின் கடமை என்று கூறிவிட்டது. இந்நிலையில் அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் திமுக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

உதயநிதி ஸ்டாலின்
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர் கே நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

மிகப் பெரிய வெற்றி
அப்போது அவர் பேசுகையில் அதிமுக அரசுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த திமுக தலைவருக்கு நன்றி. நான் அதிகமாக பேச விரும்பவில்லை. நமது திமுக தலைவர் முப்பெரும் விழாவில் சொன்னது போல் இந்த ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும்.

ஜெயில் கம்பிகள்
இப்போது கரன்சி நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த அதிமுக அமைச்சர்கள் எல்லாம் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயில் கம்பிகளை எண்ணுவார்கள் என்றார் அவர். முன்னதாக மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ பேசினார்.

அதிர்ச்சி
அப்போது பரட்டையையும் சப்பானியையும் அதிமுக அரசையும் விரட்டி அடிப்பதற்காக நமது இளைய தளபதி (விஜய் இல்லைங்க இது உதயநிதி ஸ்டாலின்) வடக்கு மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த தொகுதி நிச்சயம் வெற்றி அடையும் என்றார். நேற்றுதான் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல் முறையாக கொடியை பிடித்தார் உதயநிதி. அதற்குள் ஏதோ பழுத்த அரசியல்வாதியை போல் அதிமுக அமைச்சர்களை பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications