ஆமாம், வரிசையில்தான் நிற்கிறேன்.. தலைமை பொறுப்பை ஏற்க அல்ல.. உதயநிதி பேச்சு
தலைமை பொறுக்க ஏற்க நான் அரசியலுக்கு வரவில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆமாம்.. நான் வரிசையில்தான் நிற்கிறேன்.. ஆனால் திமுகவில் தலைமை பொறுப்பை ஏற்க அரசியலுக்கு தாம் வரவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சேலத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி இப்போதே லைனுக்கு வந்துவிட்டார். திமுக என்பது கட்சி இல்லை, அது ஒரு கம்பெனி" என்று விமர்சித்திருந்தார்.

முதுகெலும்பில்லாத அடிமைகள்
முதலமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு மறுநாளே உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்தார். அதில் "சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளிகூட தகுதி இல்லை" என்று காட்டமாகவே உதயநிதி தெரிவித்திருந்தார்.

திமுக கண்டன கூட்டம்
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பணப்பட்டி கிராமத்தில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போதும், முதலமைச்சர் அன்று பேசிய "திமுகவின் அரசியல் வாரிசு" என்ற பேச்சிற்கு மீண்டும் பதிலளித்தார். உதயநிதி கூட்டத்தில் பேசியதாவது:

சிறைக்கு போவார்கள்
"தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எல்லா அமைச்சர்களுமே ஊழல் புரிகின்றனர். இவர்கள் விரைவில் சிறைக்கு போவார்கள். அதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும்.

வரிசையில்தான் நிற்கிறேன்
என்னை திமுகவின் அரசியல் வாரிசு என்கிறார்கள். ஸ்டாலினுக்கு பின்னாடி அவரது மகன் உதயநிதி வரிசையில் நிற்கிறேன் என்றும் சொல்கிறார்கள். ஆமாம்... நான் வரிசையில்தான் நிற்கிறேன்.

தோள் கொடுப்பேன்
ஆனால் கட்சியில் தலைமை பதவிக்கு செல்ல மாட்டேன். தலைமை பதவி என்றில்லை, எந்த உயர்ந்த பதவிக்குமே செல்ல மாட்டேன். எப்போதும் திமுகவின் தீவிர தொண்டனாக மட்டுமே இருந்து கடைசி தொண்டனுக்கும் தோள் கொடுக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications