தமிழகத்தை அதிரவைத்த உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு கடந்து வந்த பாதை!
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக நடுரோட்டில் வைத்து வெட்டி கொல்லப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. இந்நிலையில் அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்
Recommended Video

திருப்பூர் : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக நடுரோட்டில் வைத்து வெட்டி கொல்லப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு இது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க தடுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
ஜூலை 11, 2015: பழநியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் கவுசல்யா உடுமலைப்பேட்டையை சேர்ந்த தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மார்ச் 13, 2016: கவுசல்யாவின் உறவினர்களால், சங்கர் மற்றும் கவுசல்யா ஆகியோர் கொடூரமான முறையில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வெட்டப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சங்கர் உயிரிழந்தார்.
ஜூன் 16, 2016 : கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி, தாயார் அன்னலட்சுமி, செல்வக்குமார், மைக்கேல், திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டி வீரன்பட்டியைச் சேர்ந்த மணி கண்டன், பாண்டித்துரை, தன்ராஜ் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 16, 2016: சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தாய், தந்தை உட்பட 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆகஸ்ட் 19, 2017- திருப்பூர் ஆட்சியராக இருந்த ஜெயந்தி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
நவம்பர் 17, 2016- விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைப்பு
டிசம்பர் 12, 2017 : ஓன்றரை ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர் இன்று திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கவுசல்யாவின் தாய், தந்தை உள்பட 11 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications