உளுந்தூர்பேட்டை அருகே மர்மக்காய்ச்சல்: 200 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே மர்மக்காய்ச்சலால் சுமார் 200 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எஸ். மலையனூர் கிராமம். கடந்த சில நாட்களாக இங்குள்ள மக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, தனி மருத்துவக் குழு அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications