மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி... கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்லும் பொதுமக்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மனித உருவில் பிறந்ததாகக் கூறப்படும் ஆட்டுக் குட்டியை அப்பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.
சிலப்பல காரணங்களால் அவ்வப்போது வித்தியாசமான வடிவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வளருவதுண்டு. வித்தியாசமான வடிவில் இருக்கும் அவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்வார்கள். சில் நேரங்களில் ஐந்தறிவு உயிரினங்களும் வினோத வடிவில் தங்களது குட்டிகளைப் பெற்றெடுப்பதுண்டு.
அந்தவகையில் திருவண்ணாமலையில், ஆட்டுக்குட்டி ஒன்று மனித உருவில் பிறந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே உள்ள காட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது வீட்டு வெள்ளாடு ஒன்று நேற்று 3 குட்டிகள் ஈன்றது. அதில் மற்ற இரண்டு குட்டிகள் வழக்கமானதாக இருக்க, முதலில் பிறந்த குட்டி மட்டும் பார்ப்பதற்கு மனித முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளைப் போன்று பெற்றிருந்தது.
மேலும், பிறக்கும்போதே அந்த ஆட்டுக் குட்டி இறந்தே பிறந்தது. ஆனபோதும், மனித உருவில் ஆட்டுக் குட்டி பிறந்ததாக பரவிய தகவலால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக வந்து ஆட்டுக்குட்டியின் உடலைப் பார்த்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications