விருதுநகர் அருகே போலீஸ்காரர் மனைவியின் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மனைவியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிச் செயினை மர்ம ஆசாமி பறித்துச் சென்றுள்ளான்.
விருதுநகர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளவர் செந்தில். அவரது மனைவி ஹேமலதா(28). ஹேமலதா விருதுநகர் அருகே உள்ள கே. உசிலம்பட்டியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு அவர் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர் யாரோ மாடியில் தூங்கிய ஹேமலதாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.
அதிகாலையில் எழுந்த ஹேமலதா தாலிச் செயினை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
போலீஸ்காரர் மனைவியின் தாலிச் செயினே திருடு போயுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications