திமுகவை ஒழிக்க மத்திய அரசு திட்டம்.. சுப்புலட்சுமி ஜெகதீசன் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை: திமுகவில் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
சென்னையில் நடைபெறும் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் இன்று, மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியதாவது: அண்ணா மறைந்த போது, அண்ணாவிற்கு பிறகு திமுக இருக்காது என ஏகடியம் பேசினர். ஆனால் கருணாநிதி இந்த கட்சியை கட்டுக்கோப்பாக வளர்த்து, 1971ம் ஆண்டு தேர்தலில் 184 தொகுதிகளில் திமுகவை வெற்றிபெறச் செய்தார். திமுக அழிக்க முடியாத இயக்கம் என கருணாநிதி நிரூபித்தார்.

கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் சாதிப்பாரா என தலையங்கம் எழுதுகிறார்கள். நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெரியார், அண்ணா வகுத்து தந்த கொள்கைகளை இறுதிமூச்சு அடங்கும் வரை கருணாநிதி செயல்படுத்தினாரோ அதேபோல, அடுத்த தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும். இந்த சாதனையை நாம் நிகழ்த்தியாக வேண்டும்.
இன்றைக்கு நாம் பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கி கொண்டுள்ளோம். மத்திய அரசு ஒருபக்கம் நம்மை ஒழிப்பதற்கும், நமது இயக்கத்தை பிளப்பதற்கும் திட்டம் தீட்டிக் கொண்டுள்ளனர். நம்முடைய இன எதிரிகள். அவர்கள் ஒரு பக்கம் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என முயல்கிறார்கள். கருணாநிதி மிகவும் விரும்பிய மாநில சுயாட்சியை நாம் மீட்டெடுத்தாக வேண்டும்.
மாநில சுயாட்சி பறிபோகிறது. அதை மீட்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. எந்த தியாகத்தையும் நாம் செய்ய தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications