இலங்கை கடற்படையை முடக்கிவிட்டால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்: பொன். ராதாகிருஷ்ணன்
மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்க வேண்டும் என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடியாக கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடித்தும் வருகிறது.

இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வேதனைக்குரியது. இந்த விவகாரத்தில் நீண்டகால தீட்டத்துடன் பிரதமர் மோடி செயல்படுகிறார்.
கொச்சி கடற்படை தளத்தில் மீனவர்களுக்காக படகுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications