இதுக்காக பொன். ராதாகிருஷ்ணனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதுவரை தனது பிறந்தநாளை கொண்டாடியதே இல்லையாம்.
சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதுவரை தனது பிறந்தநாளை கொண்டாடியதே இல்லையாம். தனது பிறந்தநாளை வழக்கமான நாளாக தான் அவர் கருதி வருகிறார்.
1952ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ம் தேதி பொன் . ராதாகிருஷ்ணன் பிறந்தார். அதாவது நேற்று அவரது பிறந்த நாளாகும். அவர் எப்போதும் தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை.

ஒவ்வொறு பிறந்தநாளுக்கும் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு , தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார். கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்தித்து வாழ்த்து பெறுவதில்லை .
நேற்று தனது பிறந்தநாளையொட்டி மன்னார்குடி அருகே மதுக்கூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செயதார்.
பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடும் அரசியல்வாதிகள் மத்தியில் பொன். ராதாகிருஷ்ணன் சத்தம் காட்டாமல், பிறந்தநாளை கொண்டாடாமல் எளிமையாக இருப்பது நிஜமாகவே பாராட்டுக்குரியது.












Click it and Unblock the Notifications