இதுக்காக பொன். ராதாகிருஷ்ணனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதுவரை தனது பிறந்தநாளை கொண்டாடியதே இல்லையாம்.
சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதுவரை தனது பிறந்தநாளை கொண்டாடியதே இல்லையாம். தனது பிறந்தநாளை வழக்கமான நாளாக தான் அவர் கருதி வருகிறார்.
1952ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ம் தேதி பொன் . ராதாகிருஷ்ணன் பிறந்தார். அதாவது நேற்று அவரது பிறந்த நாளாகும். அவர் எப்போதும் தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை.
ஒவ்வொறு பிறந்தநாளுக்கும் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு , தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார். கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்தித்து வாழ்த்து பெறுவதில்லை .
நேற்று தனது பிறந்தநாளையொட்டி மன்னார்குடி அருகே மதுக்கூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செயதார்.
பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடும் அரசியல்வாதிகள் மத்தியில் பொன். ராதாகிருஷ்ணன் சத்தம் காட்டாமல், பிறந்தநாளை கொண்டாடாமல் எளிமையாக இருப்பது நிஜமாகவே பாராட்டுக்குரியது.