யார் அந்த விரும்பத்தகாத சக்திகள்?.. தெளிவாச் சொல்லுங்களேன் பொன் ராதாகிருஷ்ணன்!

மாணவர்கள் போராட்டத்தில் ஆரம்பத்திலேயே விரும்பத்தகாத சக்திகள் நுழைந்துவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஆரம்பத்திலேயே விரும்பத்தகாத சக்திகள் நுழைந்து விட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். முன்னரே குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றிருந்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனையே வந்திருக்காது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Unwanted persons involved in the students protest: Pon. Radhakirishnan

அப்போது முன்னரே குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றிருந்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனையே வந்திருக்காது என்று அவர் கூறினார். திமுக அவசரச்சட்டம் கொண்டு வந்தபோது குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறவில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாணவர்கள் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே விரும்பத்தகாத சக்திகள் நுழைந்துவிட்டதாகவும் அவர் கூறினார். மாணவர்களின் போராட்டத்தில் மத வழிபாடு நடத்தப்பட்டது ஏன் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

மேலும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+