ஊத்தங்கரையில் நிறுவப்படுகிறது கருணாநிதியின் வெண்கலச் சிலை.. ரூ. 20 லட்சத்தில்
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ரூ. 20 லட்சம் செலவில் வெண்கலச் சிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரையில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கருணாநிதி நிறைவேற்றிய நல்ல பல திட்டங்கள் பற்றியும், விரிவாகவும் மன நெகிழ்ச்சியுடனும் கூறினர்.
இறுதியில் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகர் அவர்கள் சிலை அமைப்புக்கான செயல் திட்டங்களை விரிவாக விளக்கியதோடு, இச்சிலை அமைப்புக்கான முழு தொகையையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிர்வாகம் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவித்தார்.
வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து சிலை அமைக்கும் பணியை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
தகவல்: கவி.செங்குட்டுவன் (எ) செ. இராஜேந்திரன்