ஆவின் பாலில் கலப்படம்- அதிமுக பிரமுகர் வைத்தியநாதனை விடுதலை செய்தது ஹைகோர்ட்!
ஆவின் பாலில் கலப்படம் செய்த வழக்கில் இருந்து அதிமுக பிரமுகர் வைத்தியநாதனை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஆவின் பாலைத் திருடி அதில் கலப்படம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தென்சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் வைத்தியநாதனை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னை ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்ட டேங்கர் லாரிகளில் இருந்து பாலை திருடி, அதற்கு பதிலாகத் தண்ணீரை கலப்படம் செய்த வழக்கில் அப்போதைய அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, வைத்தியநாதன் அவரது மனைவி ரேவதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆவின் பால் கலப்பட வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனவும், ஆதாரம் இல்லாமல் வழக்கை நடத்துவது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் நீதிபதி செல்வம் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் இருந்து வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகிய இரண்டு பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
-
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications