ஆவின் பால் கொள்ளையன் அதிமுக வைத்தியநாதனின் சிறைக் காவல் நீட்டிப்பு
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைதாகியுள்ள அதிமுக பிரமுகர் வைத்தியநாதனின் நீதிமன்ற காவல் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வைத்தியநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன், அவரது காவலை டிசம்பர் 8 ஆம் தேதி அதாவது இன்று வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று வைத்திய நாதனின் காவல் முடிவடைந்ததையடுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து விசாரணை நடத்திய விழுப்புரம் நீதிமன்றம், வைத்தியநாதனின் காவலை வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆவின் பாலில் கலப்படம் செய்து பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக வைத்தியநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications