அண்ணா உருவாக்கிய திமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது: வைகோ
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: அண்ணா உருவாக்கிய திமுக இன்று அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று கூறினார். மேலும் அண்ணா உருவாக்கிய திமுக இன்று அழிவை பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ குறித்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும், அவர் ஒரு அரசியல் ஞானி என்றும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications