பேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டம்: வைகோ பகீர் குற்றச்சாட்டு!
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த வருகின்றனர்.
பேராசிரியர் ஜெயராமன் உட்பட கிராம மக்கள் 10 பேரை விடுவிக்கக்கோரி கதிராமங்களத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டம் இன்று 10வது நாளை எட்டியுள்ளது.

மயங்கி விழுந்த வைகோ
இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கதிராமங்கலத்திற்கு பேரணியாக சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, வைகோ திடீரென மயங்கி விழுந்தார்.

பொருட்படுத்தாது மீண்டும் உரை
அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடித்து ஆசுவாசப்படுத்தினர். சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து எழுந்த வைகோ, அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் ஆதரவுக் கூட்டத்தில் பேசினார்.

எதிராக போராட வேண்டும்
இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்
பேராசிரியர் ஜெயராமன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications