காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு - வைகோ குற்றச்சாட்டு
மதுரை: காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த முறைதான் நியாயமான நீரை நமக்கு பெற்று தர முடியும், ஆனால் தற்போது காவிரி நீர் குழுவும் நடுவர் மன்றம் தெரிவித்த அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு அல்ல எனவும் மொத்தத்தில் மத்திய அரசு தமிழகத்தை 2014ம் ஆண்டு முதல் வஞ்சிக்கிற செயலை செய்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காததற்கு மத்திய அரசுதான் காரணம்.
கர்நாடாகவில் வரவிருக்கிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. கர்நாடாகவில் மேகதாது அணை கட்டிவிட்டால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் தமிழகத்திற்க்கு தண்ணீர் வராது ஆகவே இந்த பெரும் அழிவிலிருந்து தமிழகத்தை காக்க இந்தபிரச்சனையில் அனைத்து கட்சியினரும், பொதுமக்களும், விவசாயிகளும் வரும் 17 மற்றும் 18 ம் தேதி விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்ற ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசின் போக்கினை சுட்டிக்காட்டி எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications