செண்பகவள்ளி அணையை சீரமைக்க கோரி வைகோ உண்ணாவிரதம்
திருநெல்வேலி: செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்யக்கோரி திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள செண்பகவள்ளி அணை மூலம் சுற்றுப்பகுதி விவசாயம் நடைபெறுகிறது. இந்த அணையின் தடுப்புச்சுவர் உடைந்துள்ளதால் பாசன விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது என்பது விவசாயிகளின் புகாராகும்.

அணைய சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. எனவே செண்பகவள்ளி அணையின் தடுப்புச்சுவரை சீரமைக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று (ஜனவரி 28) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் முகைதீன் பள்ளி மாணவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக், விடுதலை சிறுத்தைகள், உள்ளாறு குறிஞ்சான்குளம் பாசன விவசாயிகள் சங்கத்தினர், வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்வகள், நகை வணிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் வைகோ உண்ணாவிரதத்துக்கு வாழ்த்துக் கூறினர்.
இதில் டாக்டர் ப.ஆ.சரவணன், சதன் திருமலைக்குமார், எஸ்.பெருமாள், தி.மு.இராசேந்திரன், கே.எம்.ஏ.நிஜாம், மின்னல் முகமது அலி, எழுத்தாளர் மதுரா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வாசுதேவநல்லூர் பயணியர் விடுதி முன்பு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு ஜனவரி 3 ஆம் தேதி வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து நீதிமன்றம் தலையிட்டு பயணியர் விடுதி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்து, மனுதாரர் மாற்று இடத்தை தேர்வு செய்து, மீண்டும் புதிதாக மனு செய்ய வேண்டும். அந்த மனுவை பரிசீலித்து போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications