கலிங்கபட்டியில் வாக்களித்தார் வைகோ… சென்னையில் ஒட்டு போட்ட தயாநிதி மாறன்
சங்கரன்கோவில்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கபட்டியில் வாக்களித்தார்.
நாடாளுமன்ற லோக்சபாவிற்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
பிரபல வேட்பாளர்கள், தலைவர்கள் சென்னையில் வாக்களித்து ஜனநாயகக்கடமையாற்றியுள்ளனர்.

சொந்த ஊரில் வாக்களித்த வைகோ:
விருதுநகர் தொகுதி வேட்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, தென்காசி தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் காலை 9.30 மணியளவில் வாக்களித்தார்.

மகனுடன் வந்த வைகோ
வாக்களிக்க வந்த வைகோ சாதாரணமாக அனைத்து வாக்காளர்களையும் போல பத்துநிமிடங்கள் வரிசையில் நின்றார். வைகோ உடன் அவருடைய மகன் துரை வையாபுரியும் வரிசையில் நின்று வாக்களித்தார்.

அமரச் சொன்ன வைகோ
வைகோ வாக்களிக்கச் சென்ற போது, எழுந்து நின்ற அதிகாரிகளை அமரச் சொன்னார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் 200 மீட்டர் தொலைவிற்குச் சென்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தயாநிதிமாறன்
மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது மகனுடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் முதன் முறையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது தேவையற்ற செயல் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications