அனிதாவின் தற்கொலையில் முதல் குற்றவாளி மத்திய அரசுதான்: வைகோ
அனிதாவின் தற்கொலையில் முதல் குற்றவாளி மத்திய அரசுதான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
சென்னை: அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமம் அனிதாவின் சொந்த ஊர். அவரது தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார்.
ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அதில் கட்-ஆஃப் மதிப்பெண் 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
இந்நிலையில் உச்சநீதிமன்றம் வரை போராடியும் தனது மருத்துவ கனவு தகர்க்கப்பட்டதை தொடர்ந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், அனிதாவின் தற்கொலையில் முதல் குற்றவாளி மத்திய அரசுதான்.
மோடி சர்க்கார்தான் அவரது தற்கொலைக்கு முழு பொறுப்பு என்று கண்டனம் தெரிவித்தார்.