மதுரை நீதிமன்ற வளாகத்தில் "ஆடுகளம்".. ரசித்துப் பார்த்த வைகோ!
மதுரை: மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்தப்பட்டது. ஆனாலும் போலீஸார் அதைக் கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

மதுரை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஜல்லிக் கட்டுக் காளை கொண்டு வரப்பட்டு அதற்கு பூஜை போடப்பட்டது. அதில் வைகோ கலந்து கொண்டார். அதேபோல பொங்கல் வைத்தனர். மேலும், ஆட்டுச்சண்டை,சேவல் சண்டை, கோழிச்சண்டை, சிலம்பம் என பல விளையாட்டுக்களும் நடத்தப்பட்டன. அனைத்தையும் உற்சாகமாக ரசித்துப் பார்த்தார் வைகோ.

தமிழகத்தில் இந்த சண்டைக்கெல்லாம் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சேவல் சண்டைக்கு அனுமதியே கிடையாது. இருப்பினும் வக்கீல்கள் சங்கத்தினர் நடத்தியதால் போலீஸாரும் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர். வைகோவும் அனைத்தையும் ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார்.













Click it and Unblock the Notifications