விருதுநகரில் - ஏப்ரல் 1ம் தேதி வைகோ மனுத்தாக்கல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏப்ரல் 1ம் தேதி தான் போட்டியிடும் விருதுநகரில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது மதிமுக. இக்கூட்டணியில் மதிமுகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

இதில் விருதுநகர் தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். கடந்த முறையும் இதே விருதுநகரில்தான் வைகோ போட்டியிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியைத் தழுவினார். இந்த முறை வலுவான கூட்டணியில் இடம் பெற்று போட்டியிடுகிறார் வைகோ.
ஏப்ரல் 1ம் தேதி வைகோ தனது வேட்புமனுவை விருதுநகரில் தாக்கல் செய்கிறார். இதையடுத்து அன்று மாலை, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் வைகோவை ஆதரித்து பாஜக கூட்டணி அமைய பிள்ளையார் சுழி போட்டவரான தமிழருவி மணியன் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications