தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து வைகோ வழக்கு
மதுரை: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வக ஆய்வு மையத்தை மத்திய அரசு அமைக்கவுள்ளது. இதற்கான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பல்வேறு கட்சிகளும் இந்த ஆய்வகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விவசாய அமைப்புகளும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆய்வகத்தை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் அருகில் உள்ள அணைகள் பாதிக்கப்படும். இந்த ஆய்வு மையத்தால் பொட்டிபுரம் பகுதியில் விவசாய நிலம் பாதிக்கப்படும். எனவே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications