”ஓட்டுக்காக ஒரு போதும் விலை போகாதீர்கள்” - வைகோ உருக்கம்
கோவில்பட்டி: "உங்களுக்காக உழைப்பவர் யார் என்று பாருங்கள். ஓட்டுக்காக பணத்திற்கு விலை போகாதீர்கள்" என கடைசி கட்ட பிரசாரத்தில் வைகோ உருக்கமாக தெரிவித்தார்.
தூத்துக்குடி தொகுதி மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கு வாக்கு கேட்டு கடைசி கட்ட பிரசாரத்தில் இருந்த வைகோ, " தமிழகத்தில் பள்ளியில் படிக்கிற மாணவர்கள் கூட சீரழி்ந்து விட்டனர். சில வாரங்களுக்கு முன்பு சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்ணை 4 பேர் பலத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

இதனால் தமிழகத்தில் பெண்கள் அச்சத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். குஜராத் முதல்வர் மோடி்யிடம் சென்ற பொருளாதார நிபுணர்கள் மதுகடைகளை திறந்தால் 20 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று தெரிவித்தனர். 1 லட்ச கோடி ரூபாய் கிடைத்தாலும் அதை மோடி ஏற்க மாட்டான் என்று அவர் கூறியுள்ளார்.
எனது மாநிலத்தில் பெண்களை கண்ணீர் விட அனுமதிக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழகத்தில் பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 39 இடங்களிலும் அருதிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.
வாக்களிப்பதற்காக விலை போகாதீர்கள். இன்றைக்கு 500 ரூபாயின் மதிப்பு வெறும் 27 காசுகள்தான். 1000 ரூபாயின் மதிப்பு வெறும் 54 காசுதான் மதிப்பாக உள்ளது.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு உங்களுக்காக உழைப்பது யார் என்று பாருங்கள். மதிப்பில்லாத பணத்திற்கு விலை போகாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் ஜோயலுக்கு வாக்களியுங்கள்" என்று வைகோ உருக்கமாக தெரிவித்து தனது பிரச்சாரத்தை முடித்து கொண்டார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications