ம.தி.மு.க, வி.சி, இடதுசாரிகளின் மக்கள் நலன் கூட்டணியில் த.மா.கா. இணையுமா? ஜி.கே.வாசன் பதில்
ஊட்டி: மக்கள் நல கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையுமா? என்ற கேள்விக்கு தன்னுடைய சுற்றுப்பயணம் முடிந்த பிறகு அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள்நல கூட்டணியாக உருவெடுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். அப்போதே, கூட்டணியில் சேருவதற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், நான்கு கட்சிகளைச் சேர்ந்த மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள் நலனுக்காக மட்டுமல்லாமல், தேர்தலுக்காக செயல்படும் கூட்டணி என்று அறிவித்திருக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் எந்த கட்சிகளுடன் கூட்டணியாக செயல்பட விரும்புகிறார்கள். எந்த கட்சிகள் உடன் கூட்டணியாக செயல்பட விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
த.மா.கா.வை தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் த.மா.கா.வின் தேர்தல் வியூகத்தை, முடிவுகளை என்னுடைய சுற்றுப்பயணம் முடிந்த பிறகே அறிவிப்பதாக முடிவெடுத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications