மலேசியாவில் இருந்து திருப்பி அனுப்பினாலும்... செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியான வைகோ
மலேசியாவிற்குள் நுழைய முடியாமல் திரும்பிய வைகோ அங்குள்ள தமிழ் செய்திதாள்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
சென்னை: மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததோடு, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தது. மலேசிய அரசு அவரை நேற்று இரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. வைகோ தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி மலேசியாவில் உள்ள தமிழ் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக வைகோ அந்நாட்டுக்கு சென்றிருந்தார். ஆனால் மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோ பெயர் இருக்கிறது.

வைகோ, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி தங்களது நாட்டில் நுழைய வைகோவுக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் வைகோ மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மலேசிய அரசு கூறியுள்ளது.
வைகோவின் பாஸ்போர்ட்டையும் மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது மலேசியா. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இரவு 11.45 மணி அளவில் சென்னை வந்தடைந்தார் வைகோ.
வைகோவை மலேசியாவிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலரும் வைகோவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டனர்.
வைகோவின் மலேசியா வருகை, அங்கு அவருக்கு நேர்ந்த அவமானவங்கள் மலேசியா தமிழர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அங்குள்ள தமிழ் நேசன், மக்கள் ஓசை ஆகிய தமிழ் செய்தி தாள்களில் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டுள்ளனர்.
வைகோவை திருப்பி அனுப்பினா போதுமா? வைகோ பற்றிதானே இன்று மலேசியா பூராவும் செய்தியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications