முதலில் இந்தப் பக்கம் வாங்க விஜயகாந்த், பேசிக்கலாம்: வைகோ அழைப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்றால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வர வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒரு பக்கம் திமுகவும் மறுபக்கம் பாஜகவும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தும், தூது விட்டும் ஓய்ந்துவிட்டன. ஆனால் மக்கள் நலக் கூட்டணியோ இன்னும் நம்பிக்கையை இழக்காமல் விஜயகாந்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வருவார் என்று இன்னும் நம்புகிறது. இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக தலைவர் வைகோ கூறியிருப்பதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவையும், திமுகவையும் வீழ்த்த விரும்புகிறார் விஜயகாந்த். அவர் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் தான் அவர் விருப்பம் நிறைவேறும். அவர் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரின் கோரிக்கைகளை பரிசீலிப்போம். ஆனால் அவர் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என்றார்.
இந்நிலையில் தேமுதிக கூட்டணியில் சேர்வது குறித்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications