முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுவர் இடிப்பை கண்டித்து நாளைய தினம் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
சென்னையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் வைகோ பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சையில் நிறுவப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் முகப்பு இடிப்பைக் கண்டித்து, சென்னையில் நாளை ம.தி.மு.க. சார்பில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நாளை காலை 11.00 மணி அளவில் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இத்தகவலை ம.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் நன்மாறன் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications