For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் சிறையில் முருகன், சாந்தன் பேரறிவாளனுடன் வைகோ சந்திப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Vaiko Meets Rajiv Gandhi Assassins in Prison
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை வேலூர் சிறையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோ வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நளினி ஆயுள் தண்டனை கைதியாக பெண்கள் சிறையில் உள்ளார். இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று காலை 10.30 மணிக்கு வேலூர் வந்தார். சிறைக்குச் சென்று முருகன், பேரறிவாளன், சாந்தனை சந்தித்து பேசினார்.

பின்னர் பெண்கள் சிறைக்குச் சென்று நளினியையும் சந்தித்து பேசினார். சிறை வாசலில் திரண்டு ம.தி.மு.க.வினர் வைகோவை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சீமான் நேற்று வேலூர் சிறைக்கு வந்து முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினியை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று அவர்களை வைகோ சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
MDMK leader Vaiko today met Murugan, Santhan, Perarivalan and Nalini in Vellore Prison on today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X