For Daily Alerts
Just In
டெய்லர் பச்சையா மறைவு வைகோ அஞ்சலி
திருநெல்வேலி: திருநெல்வேலி ஸ்டார் டெய்லர் சகோதரர் பச்சையா அவர்கள் நேற்று (04.5.2014) காலமானார். அவரது உடலுக்கு தலைவர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கல்லூரி பருவம் தொட்டு 50 ஆண்டு காலமாக பிடித்த டெய்லராக பச்சையா இருந்து வந்தார்.
வைகோ விரும்பியபடி அவரது துணிகளை தைத்துக்கொடுப்பதில் வல்லவராக இருந்தவர் டெய்லர் பச்சையா.
1984 இல் தலைவர் வைகோ அவர்கள் தி.மு.க.வில் தொண்டர் அணியை வார்ப்பித்தபோது, தொண்டர் அணி தோழர்களுக்காக 300 சீருடைகள் இலவசமாக தைத்துக் கொடுத்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிறன்று அவர் மரணமடைந்தார். தன்னுடைய விருப்பமான டெய்லர் மரணமடைந்ததை கேள்விப்பட்ட வைகோ, டெய்லரின் வீட்டிற்குச் சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
Comments
English summary
Vaiko pays Homage to Tirunelvely Dress Maker Patchayya.
Story first published: Monday, May 5, 2014, 18:27 [IST]