தந்தை பெரியாரின் 136 ஆவது பிறந்தநாள்: வைகோ மாலை அணிவித்து மரியாதை
சென்னை: தந்தை பெரியார் அவர்களின் 136 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகம் தாயகத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன், கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாÞ, மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை ஜீவன், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், பாலவாக்கம் சோமு, தூத்துக்குடி ஜோயல் மற்றும் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் குமரி விஜயகுமார், மற்றும் மாநில, மாவட்ட, பகுதி, வட்டக் கழகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்

ரத்த்தான முகாம்
பெரியாரின் 136-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, ரத்த தான முகாம் மற்றும் மருத்துவ முகாம் பொள்ளாச்சியை அடுத்த காளியப்பகவுண்டன்புதூரில் நடைபெற்றது.

கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ராஜா, அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனை மருத்துவர்கள் வசந்த் ஆல்வா, ஜோதி சரவணன், பொள்ளாச்சி மிஸஸ் மருத்துவமனை மருத்துவர் சுமதிராஜா ஆகியோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்தனர். 30 பேர் ரத்த தானம் செய்தனர். 260 பேர் சிகிச்சையும், ஆலோசனையும் பெற்றனர்.












Click it and Unblock the Notifications