சசிகலாவுக்குத்தான் உண்மை தெரியும்... வைகோ
ஜெயலலிதா சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா இறப்பு குறித்து அவருடன் இருந்த சசிகலாவுக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டதாகவும், மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவின் இறப்பு செய்தியை வெளியிட்டதாகவும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி நிலவி வந்த நிலையில் திவாகரனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்.
ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் அநாகரிகமாக பேசி வருகிறார். ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் அதனுடைய சூழல் பற்றி தெரியவரும். 54 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன், 5 வருடம் சிறையில் இருந்துள்ளேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications