வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு பிரமியத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் - வைகோ
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் அழிந்துள்ளன. வாழ்வாதாரங்களை இழந்துள்ள விவசாயிகள் அரசின் உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

இந்நிலையில் பயிர்க் கடனுக்கான காப்பீட்டு பிரிமியத்தை வரும் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், சிட்டா அடங்கல், வேளாண் துறை அதிகாரி பரிந்துரை போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிட்டா அடங்கல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிமியம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும்.
அதுபோல மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கல்விக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications