இலக்கிய திறனாய்வாளர் திக.சி மறைவு; வைகோ நேரில் அஞ்சலி
திருநெல்வேலி: இலக்கியத்திறனாய்வாளரும், எழுத்தாளருமான திக.சி அவர்களின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
திக.சி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்த உடன், விருதுநகர் தேர்தல் பிரச்சார களத்தில் இருந்த தலைவர் வைகோ, திருநெல்வேலி புறப்பட்டு சென்றார்.

வைகோ உடன் நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பெருமாள், மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் குட்டி என்ற சண்முக சிதம்பரம், கே.எம்.ஏ.நிஜாம், மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கல்லதியான், வரலாற்று ஆய்வாளர் செ. திவான், இணையதள ஒருங்கிணைப்பாளர் மற்றும் மதிமுக நெல்லை மாவட்ட துணைசெயலாளர் மின்னல் முகமது அலி, நெல்லை மாநகராட்சி மதிமுக கவுன்சிலர்கள் ஜோசப், ஆபிரகாம் உள்ளிட்ட , பாஸ்கர நாராயணன், ஜெயின் உசேன், ராதா சங்கர் ஏராளமான மதிமுகவினர் உடன் சென்றனர்.
திக.சி அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய வைகோ, அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications