என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்! மத்திய அரசு தீர்வு காண வேண்டும்: வைகோ
சென்னை: புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடக்கும் என்.எல்.சி. தொழிலாளர்கள் போராட்டத்துக்கு மத்திய அரசு தீர்வுகாணவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள் ஜூலை 20ம் தேதி இரவு பணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலேயே தலைசிறந்த பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி. நிறுவனம் நவரத்னா தகுதியைப் பெற்றிருக்கிறது.

தென்னகத்தின் ஒளி விளக்காகத் திகழும் என்.எல்.சி. 2560 மெகா வாட் மின் உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் என்.எல்.சி.யின் வளர்ச்சிக்கு அதில் பணியாற்றும் தொழிலாளர்கள்தான் காரணமாகத் திகழ்கிறார்கள். 13 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 12 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் தங்கள் கடும் உழைப்பின் மூலம் என்.எல்.சி. நிறுவனத்தின் உற்பத்தியைப் பெருக்கி நவரத்னா தகுதிக்கு உயர்த்தி இருக்கின்றனர்.
கடந்த 2013 -14ம் நிதி ஆண்டில் 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே இந்தச் சாதனையைத் தக்கவைத்துக்கொண்டு வருகிறது. என்.எல்.சி. தொழிலாளர்கள் 01.01.2012 முதல் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரி பல மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மத்திய தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மறுத்துவிட்டதால், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை பிரகடனம் செய்துள்ளன.
புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் தொழிலாளர்கள் பெற்றுவந்த அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தமிழ்நாடு இருளில் மூழ்கும் நிலையும் ஏற்படும். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications