கடினமான + 2 வேதியியல் வினாத்தாள்- 2 மாணவிகள் தற்கொலை: வைகோ வேதனை
சென்னை: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் வினாத் தாள் கடினமாக இருந்ததால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது; இது குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல் பாட கேள்வித்தாள் பதிலளிக்க முடியாமல் மிகவும் கடினமாக இருந்ததால் சரியாக பதலிளிக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவியும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மாணவியும் தற்கொலை செய்துள்ளது மிகவும் வேதனைக்குரியதாகும்.

பள்ளித் தேர்வுகள் மாணவ -மாணவிகளுக்கு எந்த அளவிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தகைய சூழலிலிருந்து மாணவ, மாணவிகள் விடுவிக்கப்படவேண்டும்.
தேர்வுகளை பயமில்லாமல் ஆர்வத்துடன் எதிர்கொள்ள உளவியல் ரீதியாக மாணவர்களை தயார் செய்யும் பணியை பள்ளி கல்வித்துறை மிகவும் முக்கியமான பொறுப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
இந்த வருடம் சி.பி.எஸ்.சி., கணக்குப் பாடத் தேர்வு பதிலளிக்க முடியாத வகையில் கடினமாக இருந்ததால், சி.பி.எஸ்.சி. வாரியம் நிபுணர் குழு அமைத்து தீர்வு காண முடிவு செய்துள்ளன.
வேதியியல் பாடம் மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகளுக்கு மிக முக்கியமான பாடம் ஆகையால், தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்த வருடம் வேதியியல் தேர்வு குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் திறனுக்கு அதிகமான கடினமான கேள்விகள் இருக்குமானால் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications