ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் ஸ்டாலினுக்காக காத்திருந்த வைகோ!
ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழாவில் ஸ்டாலினுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காத்திருந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழாவில் ஸ்டாலினுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காத்திருந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழா சென்னை வேளப்பன்சாவடியில் இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புகழந்து பேசிய வைக்கோ
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வாழ்த்தி பேசினர்.
இதைத்தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை புகழ்ந்து வைகோ பேசிக் கொண்டிருந்தார்.

ஸ்டாலின் வருகையால் ஆரவாரம்
அப்போது நிகழ்ச்சி அரங்கிற்குள் ஸ்டாலின் என்ட்ரியானார்.
இதைத்தொடர்ந்து தொண்டர்கள் வெடிகளை வெடித்தும் ஆரவாரத்தோடும் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

வைகோவுக்கு இடையூறு
இதனால் வைகோ பேசுவதற்கு இடையூறு ஏற்பட்டது.
அப்போது ஸ்டாலின் மேடைக்கு வரும் வரையும் வெடி சத்தம் ஓயும் வரையும் பேசாமல் காத்திருந்தார் வைகோ.

வைகோவையும் அணைத்து போஸ்
இதையடுத்து மேடைக்கு வந்த ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சால்வை போர்த்தினார் ஸ்டாலின். அப்போது வைகோவையும் அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications