என்னை உருவாக்கிய கருணாநிதி... பிறந்த நாள் வாழ்த்தில் வைகோ உருக்கம்
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவாரூர்: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். அவரது பிறந்த நாளை தமிழகம் முழுக்க திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

அவரது பிறந்த நாளுக்கு கட்சி தலைவர்கள் எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக கழகத்தை உருவாக்கி காத்தவர் என் அண்ணன் கருணாநிதி. கருணாநிதியின் பேச்சுகளை நேரில் பார்த்து மனம் நெகிழ்ந்து இருக்கிறேன். தமிழகம் முழுக்க திமுகவை வளர வைத்து கட்டி காத்தவர் கருணாநிதி.
என்னை அரசியலில் உருவாக்கியவர் கருணாநிதி. நான் அரசியலில் வளர்ந்ததற்கு கருணாநிதிதான் காரணம். அண்ணாவோடு கருணாநிதி திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு இருக்கிறார். மக்களுக்காக அண்ணாவோடு சிறுவயதிலேயே சிறை சென்றவர் கலைஞர்.
திமுகவினருக்கு என் மீது கோபமும், வெறுப்பும் உண்டு. இப்போது அந்த மனக்கசப்புகள் குறைந்து அகன்று உள்ளது. ஆனால் என்னை உருவாக்கியவர் கருணாநிதி. எப்போது எனக்கு வழிகாட்டியாக இருப்பது அண்ணன் கலைஞர் கருணாநிதிதான், என்று வைகோ தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications