ஜெ. - மோடி என்ன பேசினால் இளங்கோவனுக்கு என்ன.. வானதி சீனிவாசன் "அட்டாக்"
திருச்சி: தங்களது சந்திப்பின்போது பிரதமர் மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் என்ன பேசிநார்கள் என்பதை பாஜகதான் சொல்ல வேண்டுமே தவிர ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசத் தேவையில்லை என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி- தமிழக முதல்வர் ஜெயலலிதா இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பு, வரும் பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடுக்கான சந்திப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறார்.

அரசியல் சம்பந்தமாக அவர்கள் எதுவும் பேசவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நாங்கள் (பாஜக) தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கத் தேவையில்லை.
அப்துல் கலாம் மறைவுக்குப் பின்னர், தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வந்த பிரதமரை முறைப்படி தமிழக முதல்வர் வரவேற்றிருக்கிறார். டெல்லியில் நடைபெற்று வந்த நெசவாளர் தின விழாவை நெசவாளர்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் நடத்தியது தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications