வண்டலூர் "ஜூ"வில் "நீர் நாய்கள்" – பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!
சென்னை: சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் நீர்நாய்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் 2 நீர்நாய் பச்சிளம் குட்டிகள் தாயின் துணை இன்றி மிகவும் சோர்வடைந்த நிலையில் மீட்கப்பட்டன. அந்த குட்டிகள் ஒரு ஆண், ஒரு பெண் ஆகும்.
அந்த 2 நீர்நாய் குட்டிகளும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது.

முதலுதவி சிகிச்சை:
அவற்றை பெற்றுக்கொண்ட வண்டலூர் பூங்கா மருத்துவர்கள், உடனடியாக குட்டிகளுக்கு பூங்கா விலங்குகள் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

2 குட்டிகளுக்கும் குளுக்கோஸ்:
பின்னர் 2 குட்டிகளுக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மேலும் வைட்டமின் மற்றும் சத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால் தருவிக்கப்பட்டு குட்டிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

செயற்கை நீர்த்தொட்டியில் வளர்ப்பு:
இதனால் குட்டிகள் ஆபத்து நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டன. இந்த 2 நீர்நாய் குட்டிகளும் பூங்கா விலங்கு மருத்துவமனையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்த்தொட்டியில் வைத்து கைவளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்டன.

8 கிலோ எடை:
இந்த குட்டிகள் ஒவ்வொன்றுக்கும் தற்போது நாள்தோறும் 1 கிலோவிற்கு மேலான மீன்கள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குட்டியும் தற்போது 8 கிலோ எடை உள்ளன.

பொதுமக்கள் பார்வைக்கு:
குட்டிகள் நன்கு வளர்ந்து தானே இரைத்தேடி உயிர்வாழும் நிலைக்கு வளர்ந்து விட்டன. இதையடுத்து 2 நீர்நாய் குட்டிகளும் பூங்காவில் உள்ள நீர்நாய் இருப்பிடத்தில் நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டன.
இந்த நீர்நாய் குட்டிகளை பார்வையாளர்கள் பார்த்து கண்டுகளிக்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications